3 டிசம்பர், 2010

TNTJ இளையான்குடி வட்டாரக் கிளை- கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 28.11.10 ஞாயிற்றுக்கிழமை அன்று TNTJ இளையான்குடி வட்டாரக் கிளையின் "மசூரா"(கலந்தாலோசனைக் கூட்டம்) நடை பெற்றது. இக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பாட்டன.
¤பாபர் மசூதி இடிப்பு வழக்கை உச்சநீதி மன்றமே தானாக முன்வந்து விசாரித்து நீதி வழங்க வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4 ல் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான சுவர் விளம்பரம்,பேருந்து ஏற்பாடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤இளையான்குடியில் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் குறித்து சொற்பொழிவாற்ற TNTJ நிறுவனர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களையும்,இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்ற சகோதரர் "K.S.அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்களையும் அழைப்பது என்றும் அதற்கான செலவுகளை சிவகங்கை TNTJ மாவட்டமே ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤TNTJ இளையான்குடி கிளை சார்பாக காலண்டர் தயாரிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤கூட்டுக் குர்பானி வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பள்ளிவாசலின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: