21 மார்ச், 2010

மாற்று மத சகோதரிகள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மகளிர் காவலர் ஒருவருக்கும், கன்னியாஸ்திரி ஒருவருக்கும் சகோதரர் PJ அவர்கள் மொழி பெயர்த்த "திருக்குர்ஆன்" தமிழாக்கம் 21.03.2010 அன்று வழங்கப்பட்டது.

வாழ்வாதர உதவித் தொகை வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக ஏழைப் பெண்கள் இருவருக்கு தலா ரூ600/வீதம் ரூ1200/வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

20 மார்ச், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

20.03.2010 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக சாலையூர் சென்ட்ரல் கிளாத் ஸ்டோர் எதிரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம் மாலை 6.55 மணி அளவில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் "மனித குலத்தைச் சீரழிக்கும் விபச்சாரமும் அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமது ஷா அவர்கள் உரையாற்றினார்கள்.இக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

19 மார்ச், 2010

ஜுமுஆ உரை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 19.03.2010 வெள்ளிக்கிழமை TNTJ அதிராமபட்டிணம் மாணவர் முஹம்மது அஸ்லம் அவர்கள் "அர்ஷின் நிழலில் ஏழு பேர்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.